Q: அய்யா நான் திருச்சியில் 1000 ச.அடியில் புது வீடு கட்ட இருக்கிறேன்..பொதுவாக ஒரு வீட்டின் அழுகு தொட்டி., குடி நீர் தொட்டி ( கீழ் நிலை.., மற்றும் மேல் நிலை) ஆகிய தொட்டிகளின் கொள்ளவை எப்படி கணக்கிடுவது? எங்கள் வீட்டில் 4 பெரியவர்கள் 2 குழந்தைகள் மட்டும் தான் வசிக்க இருக்கிறோம்... - செங்கல்வராயன்., தலைமை ஆசிரியர் வீடுகளில் கட்டப்படும் அழுகுத் தொட்டிகளுக்குப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைப் பொறுத்து அளவீடுகள் உள்ளன. அவை கீழே தரப்பட்டுள்ளன. . குடிநீர்த்தொட்டி (தரைகீழ் மற்றும் மேல்நிலை)கள், ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் என்ற கணக்கிலும் மற்றும் பிறதேவைகளுக்கேற்ப (தீத்தடுப்பு, தோட்டம், நாய், கோழி போன்ற பிராணி வளர்ப்பு) அமைக்கப்பட வேண்டும். 4 பெரியவர்கள் + 2 குழந்தைகளுக்கு 4000 லிட்டரின் தரைகீழ்த் தொட்டியும் 2000 லிட்டரில் மேல்நிலைத் தொட்டியும் போதுமானவை.
வீடுகளில் கட்டப்படும் அழுகுத் தொட்டிகளுக்குப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைப் பொறுத்து அளவீடுகள் உள்ளன. அவை கீழே தரப்பட்டுள்ளன.
குடிநீர்த்தொட்டி (தரைகீழ் மற்றும் மேல்நிலை)கள், ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் என்ற கணக்கிலும் மற்றும் பிறதேவைகளுக்கேற்ப (தீத்தடுப்பு, தோட்டம், நாய், கோழி போன்ற பிராணி வளர்ப்பு) அமைக்கப்பட வேண்டும். 4 பெரியவர்கள் + 2 குழந்தைகளுக்கு 4000 லிட்டரின் தரைகீழ்த் தொட்டியும் 2000 லிட்டரில் மேல்நிலைத் தொட்டியும் போதுமானவை.
Q: மதிப்பிற்குரிய பொறியாளர் அவர்களே, Framed Structure வகை கட்டிடங்களில் வெளிப்புற சுவர்களில் உத்திரங்களுடன் இணையும் இடத்தில் ஏற்படும் ளாசiமெயபந விரிசல்களின் வழியே மழைக்காலத்தில் நீர்க்கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா? - சதீ", சைட் பொறியாளர், மதுரை
அடிப்படையாகவே வெளிப்புறச் சுவர்களில் உத்திரங்களுடன் இணையும் இடத்தில் ஏற்படும் சுருக்க (Shrinkage) விரிசல்களின் வழியே மழைக் காலத்தில் நீர்க்கசிவு ஏன் ஏற்படுகிறது? என்பது முற்றிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். தடுக்கும் வழியாகவே இவற்றை முயலலாம்.
1. வெளிப்புறச் சுவர்களை உத்திரங்களை முட்டிக் கட்டாமல் 12மிமீ இடைவெளி விட்டு, அந்த இடத்தில் Expansion pad வைத்து நிரப்பலாம்.
2. மொட்டை மாடி, கைப்பிடிச் சுவர்களிலிருந்து மழை நீரை - தள்ளிவிழுமாறு ஏற்பாடு செய்யலாம்.
3. தற்காலிகமாக மொட்டை மாடியில் New Coat - உம், சுவரும் உத்திரங்களும் சேரும் பகுதிகளில் Ultra Tech-Seat & Dry- 2 Coats அடித்துத் தடுக்கலாம்.
Q: கான்கிரீட்டில் சில இழைகளைப் பயன்படுத்தி கான்கிரீட்டை வலிமை ஆக்கலாம் என படித்தேன். அதில் ஸ்டீல் இழைகள்., பாலி புரொப்பலீன் இழைகள் என இரு குவாலிட்டி இருப்பதாக அறிய நேர்ந்தது. இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எந்த பயன்பாட்டிற்கு எந்த இழைகளை பயன்படுத்த வேண்டும். - பொறி. மனோகர். திருஅல்லிக்கேணி.
காங்கிரீட்டை - நீட்சி விசையினைத் தாங்கும் தன்மையினைக் கூட்டிட, எஃகு இழைகள் (Dramix போன்ற) மற்றும் செயற்கை நெகிழி இழைகள் (Recron 3S போன்ற) பயன்படுத்தப்படுகின்றன. எஃகு இழைகள் செலவு கூடியவை. செயற்கை நெகிழி இழைகள் செலவு குறைந்தவை.
தேவைக்கேற்ப இரண்டில் ஒன்றைப் பயன் படுத்தலாம். பொதுவாக தொழிற்சாலை தளங்கள் அமைத்திட இந்த இழைகள் பயன்படும்.
Q: கான்கிரீட்டில் சில இழைகளைப் பயன்படுத்தி கான்கிரீட்டை வலிமை ஆக்கலாம் என படித்தேன். அதில் ஸ்டீல் இழைகள்., பாலி புரொப்பலீன் இழைகள் என இரு குவாலிட்டி இருப்பதாக அறிய நேர்ந்தது. இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எந்த பயன்பாட்டிற்கு எந்த இழைகளை பயன்படுத்த வேண்டும். - பொறி. மனோகர். திருஅல்லிக்கேணி.
காங்கிரீட்டை - நீட்சி விசையினைத் தாங்கும் தன்மையினைக் கூட்டிட, எஃகு இழைகள் (Dramix போன்ற) மற்றும் செயற்கை நெகிழி இழைகள் (Recron 3S போன்ற) பயன்படுத்தப்படுகின்றன. எஃகு இழைகள் செலவு கூடியவை. செயற்கை நெகிழி இழைகள் செலவு குறைந்தவை.
தேவைக்கேற்ப இரண்டில் ஒன்றைப் பயன் படுத்தலாம். பொதுவாக தொழிற்சாலை தளங்கள் அமைத்திட இந்த இழைகள் பயன்படும்.
Q: அய்யா.., எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்கள் பல காலம் தமிழ் நாடு பொதுப்பணி துறையில் பணியாற்றியவர்.. அதிலும் அணைகள், நீர் வள மேலாண்மையில் கவனம் செலுத்தியவர்.. உங்கள் பல கட்டுரைகள் அதைத்தான் தெரிவிக்கின்றன ,அதே போல் கட்டடங்கள் உருவாக்கத்திலும் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள்... அப்படியெனில் உங்கள் தனிப்பட்ட ஆளுமை எந்தத் துறையில் அதிகம் மேலோங்கி நிற்கும்?. கட்டடங்களா? அணைகளா? -பொறி. விஜயராகவன், சேலம்.
நீர்வள மேலாண்மையை விட கட்டடங்களில் மிகச் சிறந்த தனிப்பட்ட ஆளுமை எனக்கு உண்டு. துறையில் தொடக்கத்தில் 20 ஆண்டுகள் கட்டடத் துறையில் பெரும் பயிற்சி (அதுவும் கட்டுமான வடிவமைப்பில்) பெற்றிருக்கிறேன். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இந்தப் பதினாறு ஆண்டுகளில் (2002 முதல் 2018 வரை) மிகப் பெரும் கட்டுமானங்களை வடிவமைத்துச் செயற்படுத்தியிருக்கிறேன்.
பன்மாடி குடியிருப்புகள், உயர்நிலைப் பள்ளி - கல்லூரிக் கட்டடங்கள், பெரிய பெரிய கிருத்துவ ஆலயங்கள், நீண்ட தொழிற்சாலைகள் எனப் பல்வகைக் கட்டடங்களில் வல்லமை பெற்றுள்ளேன். கட்டடங்கள் துறையில் என் ஆளுமை மேலோங்கியிருந்தாலும், எனக்கு முகவரி, பெயர் பெற்றுத் தந்தது நீர்வள மேலாண்மையே.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|