Q: எனது வீடு 20 ஆண்டு காலத்திற்கு முந்தையது (சட்டகோப்பு கட்டுமானம் அல்ல). 1800 ச.அடி கொண்டது. இதன் இரு தளங்களில் 10 குடித்தனங்கள் உள்ளன. தற்போது, மொட்டை மாடியில் தலா 450 ச.அடியில் இரு வீடுகள் கட்ட்ட இருக்கிறேன்.(ஆஸ்பெஸ்டால் கூரை மட்டுமே) இதற்கெனெ, தனியாக பூமியிலிருந்து பில்லர் அமைத்து அதன் மீது புதிய கட்டுமானம் அமைக்க வேண்டுமா? அல்லது எப்போதும் போல் தளம் மீது சுவர் அமைத்திட்டால் போதுமா? கீழே தாய்ச் சுவர்கள் தாங்குமா? பெருமாள் சிவன், மின் ஊழியர், சூளை
தங்கள் கேள்வியில் எந்தவகை அடிமண், எந்தவகையான அடித்தளம் ( (open Trench Continuosfootingor stub column - gradebeam)) என்ற விவரங்கள் தரப்படவில்லை.
அடித்தளத்தின் அளவுகள், தரைத்தள மற்றும் முதல் தளத் தாய்ச்சுவர்களின் செங்கல் சுவர்களின் அகலங்களும் தரப்படவில்லை. இவை இருந்தால் தான் G+2 தளங்கள் (மொட்டை மாடி வீடுகள் உட்பட) கட்டமுடியுமா? சுவர்களும் அடித்தளமும் தாங்குமா? என்ற விவரங்களை ஆய்வு செய்ய முடியும். எனவே, திறமையும் அனுபவமுள்ள ஒரு வடிவமைப்பு பொறியாளரை அணுகுங்கள்.
Q: அஸ்திவாரம் மற்றும் செப்டிக் டேங்க் தோண்டும் போது கிடைக்கிற மண்ணையே பேஸ் மட்டம் நிரப்புவதற்கு பயன்படுத்தலாம் என்கிறார்களே அது சரியா? அது பலமுள்ளதாக இருக்குமா? - முருகேசன், குன்றத்தூர்.’
முதலில் நீங்கள் வீடுகட்டுமிடத்தில் - அடி மனைத்தளத்தில் கிடைக்கும் மண்வகை எது - செந்சரளையா, பருமணலா, நொய் மணலா, கெட்டிக் களிமண்ணா, மென் களிமண்ணா என்பது தெளிவாக தெரிவிக்கவில்லை .
குன்றத்தூர் என்றால் அடையாறு ஒட்டியுள்ள பகுதியில் மணல் கிடைக்கலாம். எனவே செந்சரளை மண், பருமணல் போன்றவற்றை அடித்தள வெட்டு மண்ணைக் கொண்டு நிரப்பலாம்.
நொய்மணல், களிமண் / குறிப்பக மென் களிமண்ணாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை நிரப்பு மண்ணாகப் பயன்படுத்தக் கூடாது.
மாற்றாக கருங்கல் உடை தூளைக் (Quarry Dust/Stone Crusher Dust) கொட்டி நிரப்புவது சிறப்பானது; செலவும் குறைவு.
மேலும் கரியான் எதிர்ப்பு தருவதாகவும் இது அமையும்.
Q: மாதவரம் அடுத்த மாத்தூரில் எனது புராஜெக்ட் செய்ய உள்ளேன். ஜி+2 என்ற அளவில் 8 வீடுகள் இதில் அமைய உள்ளன. அடிக்கடி வெள்ளம் சூழும் பகுதியில் அதற்கேற்ற வகையில் சிறப்பு அடித்தளம் அமைக்க வேண்டும் என்கிறார்களே. அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்.... - ராஜசேகர், பிரிமீயம் பில்டர்ஸ்
Q: நான் எனது ஜி+2 கட்டுமானத்திற்காக கிட்டத்தட்ட 16 பில்லர்களை கடந்த அக்டோபர் மாதம் எழுப்பி இருந்தேன். வெறும் அஸ்திவாரம் வரையில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தரையில் இருந்து டி.எம்.டி. சென்ட்ரிங் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மழையின் காரணமாக 2 மாத காலம் கட்டுமானப் பணிகளை அப்படியே விட்டு விட்டேன். தற்போது பணிகள் துவங்கலாம் என்றால், டி.எம்.டி கம்பிகள் அதிகமாக துருப்பித்து இருக்கின்றன. துருவை அகற்றாமல் பணிகளை தொடரலாமா? கூடாது என்றால், துரு அகற்ற என்ன வழி? - - ஜீவ பிரகாசம், தனியார் நிறுவன கணக்காளர், திருநின்றவூர்.
Q:
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|