MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: வீரப்பன் அய்யா அவர்கட்கு. நாங்கள் 2400 ச.அடி பரப்பு கொண்ட வீட்டு மொட்டை மாடியில் ஒளி ஊடுருவும் கூரை அமைக்க இருக்கிறோம். (தளத்தில் சிறி ய அளவில் மூலிகை சோப் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது ) பிவிசி, பாலி கார்பனேட் என பல வகை கூரைகள் சொல்கிறார்கள். செலவு குறைந்த, உறுதியான, லேசான கூரைப்பொருட்கள் ஏதாவது இருந்தால், அதன் குணாதிசயங்களோடு விலையையும் ஒப்பிட்டு எனக்குச் சொல்லுங்கள்.. - திருமதி. எம்.அர்ச்சனா, இல்லத்தரசி, விருகம்பாக்கம்


Answer:

உங்கள் வீட்டு மொட்டைமாடித் தளத்தில் நிறைய வெளிச்சமும் காற்றோட்டமும் உடைய கூரை அமைப்பது வரவேற்கத்தக்கது, அதற்கு மேலும் புதிய கூரைக் கட்டுமானப் பொருளைப் பயன்படுத்திட வேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. ஆனாலும், இரண்டு நிபந்தனைகளை விதித்துள் ளீர்கள்

.

1. செலவு குறைந்த லேசான கூரைப் பொருள்.
2.உறுதியாக நிடித்து ழைக்கும் கூரைப் பொருள் எங்களுடைய கருத்துரைகள் இவைதான்.

 

1..Tata Structura / Jindal RHS / SHS எனப்படும் எஃகு உறுப்புகளைக் கொண்டு கூரைக் கட்டமைப்பு ஏற்படுத்தல் ,

 

2. அதன் மீது FRP (Fibre Reinforced plastic) 
அல்லது polycarbonate Double walled sheet-corrugated & Grooved கொண்டு மூடுவது தேவைகளை நிறைவு செய்யும் (எனிலும் பிவிசி தகடோ/ FRP / Polycarbonate plain தகடோ நீடித்துழைக்காது, விலையும் கூடுதல். எனவே கூடாது)

 

3.பக்கவாட்டுச் சுவர்களை- போதுமான சன்னல்கள் வைத்த ஃபிளைஆஷ் செங்கல் சுவர்கள் கொண்டு அமைத்திடலாம்.

 

இதன் செலவு:- 
எஃகு கூரையமைப்பு : ரூ. 150/ச.அடி,
Polycarbonate plain : : தகட்டுப் போர்வை ரூ. 400/ச.அடி. பக்கவாட்டுச் சுவர்கள், சன்னல்கள்

பூச்சுவேலை :
ரூ. 40 / ச.அடி.

கூடுதலாக டர்போ வெண்டிலேட்டர்கள் - 6 :
ரூ 1000/ ஒன்று . மொத்தச் செலவு : 
ரூ 15 லட்சம் ஆகலாம்.

 

இதை 30/40 நாட்களில் கட்டி நிறைவு செய்யலாம், பராமரிப்புச் செலவு குறைவு, வசதியாக உழைக்கக் கூடியது. எஃகுக் கூரை அமைப்புக்கு ஒரு திறமை வாய்ந்த வடிவமைப்புப் பொறியாளரை அனுகுங்கள்.



Q: நான் திருத்தனியில் 880 ச.அடியில் தனி வீடு ஒன்றை தெரிந்த மேஸ்திரி துணையுடன் கட்ட இருக்கிறேன்.எனக்கு சிமெண்ட் தொடர்பான கேள்வி இதுதான். 1.சந்தையில் ஏராளமான சிமெண்ட் நிறுவனங்கள் உள்ளன. அது ஒவ்வொன்றும் ஏராளமான பிராண்டுகளை தயாரிக்கின்றன. அவற்றில் எது No.1 Cement ? 2.கான்கிரீட் தயாரிப்பதற்கு ஒரு வகை சிமெண்ட், பூச்சுவேலைக்கு ஒரு சிமெண்ட் பயன்படுத்த வேண்டும் என எனது உறவினர் சொல்கிறார். அது உண்மையா ?உண்மையயனில் கான்கிரீட் தயாரிப்பதற்கும், பூச்சுவேலைக்கும் எந்தெந்த சிமெண்டை பயன்படுத்த வேண்டும். - பா.கணேசன் ,கொத்தூர்


Answer:

 யார் (தகவல் தெரிந்த பெரிய புத்திசாலி) இப்படியயல்லாம் தெரிவிக்கிறார்கள். முற்ஷீலும் தவறான தகவல் எனினும் உறுதியான வலிமையான கட்டடத்திற்குக் கீழ்க்கண்டவற்றைப் பரிந்துரை செய்கிறோம். ஆனால் எல்லாவற்
றிற்கும் PPC (எரிசாம்பல் 35% வரை கலந்தது) சிமெண்ட் ஒன்றே ஏற்றது.

 

1. அடித்தளம், தூண், விட்டங்கள், பலகங்கள் - னி25 தரம் (1:1:2)
2. கட்டுவேலை - PPC - சிமெண்ட் கலவை விகிதம் 1:5
3. பூச்சுவேலை - PPC சிமெண்ட் கலவை விகிதம் 1:6

முதல் பத்தியைப் படித்து மறந்து விட்டேன்.

 

எந்தக் காரணத்திற்காகவும் மேஸ்திரி மூலமாக வேலையாள் ஒப்பந்தத்தில் (Lobour Contract ) வீடு கட்டவே கூடாது. அலைச்சலும் கூடுதல் செலவுமே (இறுதியில்) மிஞ்சும். தகுதியுடைய நல்ல நம்பிக்கையுடைய ஒரு கட்டுமானப் பொறியாளரிடம் கொடுத்து ((Plinth Area contract or total lump sun contract) மூலமாக) பதிவு பெற்ற ஒப்பந்தத்தினுடன் வேலையைச் செய்யுங்கள். கட்டடத்தின் உறுதிக்கும் வலிமைக்கும் ( (Structural Stability) ஒப்பந்தக் காரரைப் பொறுப்பாக்கி ஒப்பந்தத்தைப் போடுங்கள். 



Q: அன்புள்ள பொறியாளர் அவர்கட்கு, எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன். இப்போது எல்லா நகரங்களிலும் பாதாள சுரங்க ரயில் பாதைகள் வந்து விட்டன. கடுமையான நில நடுக்கத்தின் போது, இப்பாதைகள் (சுரங்க வழிகள்) மண் சரிந்து மூடப்படாமல் இருக்குமா? ஒருவேளை உள்ளே மக்கள் இருக்கும்போது, சுரங்கப்பாதை நில அதிர்வுகளால் பாதிக்கப்படும்போது மக்கள் எப்படி வெளியே வர முடியும்? -ஆர். சாருலதா, பேrன் டிசைனர், அண்ணா நகர், சென்னை


Answer:

அன்பு சகோதரி சாருலதா அவர்களே!
அண்ணா நகரில் வசிக்கும் தங்களுக்கு (அண்ணா நகர் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை செல்வதால்) இத்தகைய பயம் வருவதற்குத் தகுந்த காரணம் உள்ளது.

முதலில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். சென்னை-மும்பை-டெல்லி- கொல்கத்தா போன்ற நகர்களில் அமைக்கப்பட்ட எல்லா சுரங்க ரயில் பாதைகளும் அப்பகுதிகளில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்க விசைகளைத் தாங்கி நிற்கும் வகையிலேயே (ரிக்டர் அளவுகோலில் 7.80 வரை) வடிவமைக்கப்பட்டு - உரிய பாதுகாப்பு வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளன. எனவே சுரங்க ரயில் பாதைகளில் விபத்துக்கள் ஏற்படுவதில்லை.

மேலை நாடுகளில் - சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதலியவற்ஷீல் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலுள்ள சுரங்க ரயில் பாதைகள் மிகவும் உறுதியுடன் பாதுகாப்புடன் உள்ளன. தரைமேல் செல்லும் இரயில் பாதைகளில் நாள்தோறும் நடைபெறும் விபத்துகளில் 1000 இல் ஒரு முறை கூட சுரங்க ரயில் பாதைகளில் நடைபெறுவதில்லை. அண்மையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ((Swiss Alps) உலகின் மிக நீளமான 56 கிமீ சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டு கோலாகலமாக சூன் 1, 2016கொண்டாடப்பட்டு திறக்கப் பட்டது.

சென்னையைப் பொறுத்த வரையில் - சென்னை நிலநடுக்க மண் டலம் 3- இல் வருகிறது. இதன் ரிக்டர் அளவுகோல் 3.50 முதல் 4.20 வரை (பாரம் ஏற்ஷீய ஒரு சரக்குந்து நெடுஞ்சாலையில் 60 கிமீ வேகத்தில் சென்றால் - அருகிலுள்ள வீடுகளில் ஏற்படும் அதிர்வுகளே - 3.50 முதல் 4.20 வரையுள்ள ரிக்டர் அளவின் அதிர்வுச் செஷீவு ஆகும். (Highest intensity of Earthquake) கடந்த 1000 ஆண்டுகளில் 
சென்னையில் நிலநடுக்கத்தால் எந்த பெரியபாதிப்பும் ஏற்படவில்லை.
எனவே, சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதைகளும் நிலநடுக்க விசைகளைத் தாங்கும் வகையில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பாகக் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் சகோதரி சாருலதாவுடன் சேர்ந்து.



Q: எளிய முறையில் ஃபூட்டிங்க் அமைப்பைக் கடந்த பகுதியில் கண்டோம் இப்போது ஃபூட்டிங்க்கு அடுத்த அமைப்பான கிரேடு பீமைப் பற்றிப் பார்ப்போம்.


Answer:

எளிய முறையில் ஃபூட்டிங்க் அமைப்பைக் கடந்த பகுதியில் கண்டோம் இப்போது ஃபூட்டிங்க்கு அடுத்த அமைப்பான கிரேடு பீமைப் பற்றிப் பார்ப்போம்.

கிரேடு பீம் தாங்கு திறனுக்காக அமைக்கப்படுகின்றன. பீம்கள் அனைத்து தூண்களையும் இணைப்பதன் மூலம் செயல்களை ஒருமைப்பாட்டாய் மாற்றி அவற்றை அசையாமல் ஆடாமல் காக்கின்றன.

கட்டிடத்தின் ஒட்டுமொத்த சுமை, தூண்கள் வழியே கிரேடு பீமுக்குச் செலுத்தபடும். அதைத் தாங்கி ஃபூட்டிங்க் மூலம் பூமிக்கு கிரேடு பீம்தான் செலுத்துகிறது. பெரும்பாலான கட்டிட விபத்துகள் ஏற்படக் காரணம் கிரேடு பீம் வலிமை இழப்பதுதான்.

இதில் சிறு இடைவெளியோ, விரிசலோ ஏற்படுமாயின் சிறிது சிறிதாக எடையைத் தாங்கும் திறனற்றுக் கட்டிடத்தின் தூண்களும், சுவர்களும் பாதிப்படையும். இதனால் கட்டிடம் உடைந்து சரியும் நிலையும் ஏற்படுகின்றன.

இவ்வாறு நடக்கச் சிறிது காலம் ஆகலாம். இதைச் சில அறிகுறிகள் மூலம் முன்னரே உணரலாம். சில கட்டுமானங்களில் பீம் தன்னால் இயன்ற வரையில் கட்டிடத்தின் சுமையைத் தாங்கும். மேலும் அதிக சுமை ஏற்றினால் ஒரு கட்டிடம் திடீரென உடைந்து உள்ளே அழுந்திவிடும்.

சமீபத்தில் நமது இந்தியாவில் மும்பை,டெல்லி நகர்களில் நடந்த சில விபத்துகளை உதாரணமாய்க் கூறலாம். பழங்கால மற்றும் பழமையான கட்டிடத்தில் கூடுதல் அடுக்குத்தளங்கள் அல்லது செல்போன் கோபுரம் அமைத்த சில காலங்கள் கடந்த உடன் இந்த விபத்துகள் ஏற்பட்டிருப்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறோம் எனில் தற்போதைய சுமைகளுக்கும், வருங்காலத்தில் ஏற்றப்படும் அடுக்குகளையும் கணக்கில் கொண்டே தகுந்த கிரேடு பீம்கள் அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

வருங்காலச் சுமையைக் கணக்கிடுவோம்

சிலர் ஒரடுக்குக்கு பீம் அமைத்து வீடு கட்டிக் குடியிருப்பர் பின்னாளில் சில அடுக்குகள் கூடுதலாகக் கட்ட முற்படும்போது தகுந்த ஆய்வாளர்களின் மூலம் சோதித்து அறிவது நன்று. இதற்குச் சில இடங்களில் துளையிட்டோ அல்லது சிறிது சிதைத்தோ மாதிரிகள் எடுத்து செய்யப்படும்.

சிதை சோதனைகளும் (Destructive Test), சிதைக்காமல் ஊடுருவும் கதிர்கள், டிஜிட்டல் கருவிகள் கொண்டு செய்யப்படும் சிதைவுறாச் சோதனைகளும் (Non-Destructive Test) உள்ளன. இன்னாட்களில் கான்கீரீட்டை இடும்போதே சென்சார் ஸ்டிக்கர் பொருத்தி அதன் பிந்தைய வலிமைகளை ஆய்வு செய்யும் வழிகளும் உள்ளன.சுனாமி எதிர்ப்பு கட்டுமானங்களில் தரை பீம்கள் அமைப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

புதிய தனி வீடு கட்டுவோர் போடு மண்ணில் பீம் அமைக்கக் கூடாது. நிலபரப்பு மேல் அமைவதைவிட நிலபரப்புக்கு கீழ் அமைக்கலாம். கிரேடு பீம் அமைக்க அதற்கான தளம் முதலில் அமைக்க வேண்டும்.

இதை அமைக்க எளிதான வழிமுறைகளைப் பார்ப்போம். முதல் வழிமுறை 40mm கருங்கல் ஜல்லியுடன் சிமெண்ட் மணல் கலந்து இடலாம். இது நடுத்தர செலவு பிடிக்கும்.

அடுத்த வழிமுறை கையாளும்போது கிடைக்கும் கால் அரை செங்கற்களை உடைத்து சிமெண்ட் மணல் கலந்து இடலாம் இதில் பழைய வீடுகளில் இருந்து எடுத்த செங்கற்களை உடைத்து பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் அதில் கரையான், செல் தொற்று இருக்க வாய்ப்புள்ளது. புதிய கற்களை ஜல்லியாக உடைத்துப் பயன்படுத்தலாம் இம்முறை மற்ற விதங்களை விட சிக்கனமானது.

அடுத்த வழிமுறை முழு செங்கற்களையோ அல்லது பிளைஆஷ் கற்களையோ சிமெண்ட் மணல் சாந்தால் இணைத்து தூல நீள, அகலத்திற்குப் பரப்பிவிடலாம். இதற்குச் செலவு அதிகம் ஆனால் துல்லியமாக பீம் அமைப்பை இதில் கொண்டுவரலாம்.



Q: என் பக்கத்து மனையில் ஒரு மிகப்பெரிய பாழும் கிணறு உள்ளது, அதை ஒட்டியே எனது மனை அமைந்துள்ளது? கிணறு வரும் இடத்தில், நான் அஸ்திவரம் எழுப்பும்போது ஏதேனும் விசேஷ முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமா? -என்.சம்பத். டிவிஎஸ், ஊழியர், சோளிங்கர்


Answer:

உங்கள் மனையில் உள்ள பெரிய பாழும் கிணற்றின் அளவுகள் மற்றும் ஆழம் இவற்றோடு அடி மனையின் மண் வகை என்ன போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அந்தப் பாழும் கிணற்றை பயன்படுத்தப்போவது இல்லை, என்றால், அதைச்சுற்றி 2’0” ஆழத்திற்கு வருமாறு சுற்றி மண்ணை வெட்டி எடுத்து விடவேண்டும்.

அதற்குப் பின் கிணற்றின் 3’0” விட்டம் மற்றும் அந்த இடத்தில் உள்ள தூண்மீது வரும் பாரம் இவற்றிற்கு ஏற்ப 2’0'’ உயரமுடைய எம்25 காங்கிரீட் Fe500 TMT கம்பிகள் வைத்து அந்த காங்கிரீட் பலத்தை Pile Cap வடிவமைப்பு செய்துபோடவும். அதன்மீது பாதுகாப்பாக தூணை நிறுத்தலாம். அந்த கிணற்றின்விட்டம் 3’0'’ அல்லது 4’0'’ அளவில் இருந்தால் அந்தப் பகுதியில் வரும் தூண்களை 5’0'’ (அ) 6’0'’ தள்ளிப்போட்டு - Cantilever grade beamஅமைத்தும் அடித்தளமும், மேல்தளமும்கட்டலாம். 
வடிவமைப்புப் பொறியாளரை அணுகி ஆலோசனை பெற்று அதன்படி அடித்தளம் அமைக்கவும்



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000