Q: அய்யா வீரப்பன் அவர்களே! நீங்கள் பலமுறை அதி நவீன ரசயாணப் பொருட்களைப் பற்றித்தான் சொல்கிறீர்களே தவிர, மண்ணையும், வளத்தையும் பாதுகாக்கும்.., கட்டுமானச் செலவைக் குறைக்கும் வட்டாரக் கட்டடக்கலை பற்றி எந்த விளக்கக் கட்டுரையும், கருத்தையும் எழுதுவதில்லையே ஏன்? - தமிழ்வேலன், மணப்பாறை, ஆசிரியர்
நண்பர் தமிழ்வேலன் அவர்களே. வட்டாரக் கட்டடக்கலை பற்றிதங்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. Larry Baker எனும் கட்டடக் கலைஞர் விரும்பும் வகை என்றால் அதிகமான பரப்பளவு உள்ள காலிமனை வேண்டும். அப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டுவதற்கு இன்றைய நவீன கால மனப்பான்மை, வாழ்வுமுறை (குறிப்பாக சென்னை போன்ற பெருநகரமைப்பு) ஒத்துக் கொள்வதில்லை.
பாரம் மிகுதியாக வரும் சட்டக் கோப்புடைய பன்மாடிக் கட்டடங்களை (Apartments Building) வட்டாரக் கட்டடக் கலை முறையில் கட்ட முடியாது. அதை விட உறுதியும் உழைப்பும் RC Buildings மாதிரி வராது. செலவும் கூடவே (உரிய Skilled Labor கிடைக்காமையால்).
எனவே பெரிதும் பயனில்லாத இத்தகைய கட்டடங்களைப் பற்றி நான் எழுதுவது இல்லை.
Q: அய்யா! நான் சென்னை. திருவெற்றியூரில் என் நண்பன் வீட்டில் ஒரு விசித்திரமான வடிவமைப்பைப் பார்த்தேன். அதாவது 350 லிட்டர் கொள்ளளவு உடைய ஒரு தண்ணீர் தொட்டியை அவர்கள் வீட்டின் பால்கனியிலேயே ஒரு ஓரமாக கட்டியிருக்கிறார்கள்.(படத்தில் உள்ளது போல் அல்ல.,) ‘அதற்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பேரலை வைக்கலாமே, பால்கனியில் தண்ணீர் தொட்டியை கட்டுவது ஆபத்தாயிற்றே?’ எனச் சொன்னேன். அதற்கு அவனோ ‘மூன்று பக்கம் ஏற்கெனவே சுவர் இருக்கிறது. நாங்கள் ஒரு பக்கம் ( நான்காவது பக்கம்) கண்டி கற்களால் மெல்லிய சுவரை எழுப்பி தொட்டியாக்கி விட்டோம். இது மிகவும் மலிவானது’ என்கிறான். மேலும், இதற்கு ஈடாக 2 பேரல்களின் இடத்தை விட இந்த பால்கனி தொட்டியின் இடப்பரப்பு சிறியது என்று காரணம் கூறுகிறான். இது சரியானதா? - சதீஷ், மோட்டார் மெக்கானிக், அயன்புரம்
Q: ஐயா, நானும் பொதுப்பணித் துறையில் பணியாற்றுகிற ஒரு பொறி யாளன்தான். உங்களிடம் எனது கேள்விகள் இரண்டு. 1. உங்கள் ஒட்டுமொத்த தநாபொபது வாழ்நாள் பணி யில் ஆட்சியாளர்களின் தொந்தரவு இருந்ததா? அல்லது சுதந்திரமாக செயல் பட்டு மனநிறைவோடு பணிக் காலத்தை முடித்தீர்களா? 2. “வீரப்பன் பணி ஓய்வுக்கு முன்‘, “பணி ஓய்வுக்கு பின்‘ இந்த இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது? -பொறி, ஞானமலர்
Q: உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். சர்தார் வல்லபாய் படேலின் அதி உயர் கான்கிரீட் சிலையை நீங்கள் இந்திய கட்டுமானப் பொறியியலின் சின்னமாகப் பார்க்கிறீர்களா? அல்லது வளர்ச்சி நோக்கற்ற அரசியலின் ஆடம்பரப் பொருளாகப் பார்க்கிறீர்களா? - பொறி. ஆடலரசு, வேலூர்
Q: அய்யா வீரப்பன் அவர்களே? உங்கள் கைக்குள்ளே கட்டுமானத்தொழில் என்கிற ஒரு நூலை வாங்கிப் படித்தேன். அது எனக்கு பயனுள்ள பொறியியல் நூலாக இருக்கிறது. ஆனால் என் மகன் ஆங்கிலம் வழி படித்த பொறியாளன் என்பதால், அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே உங்கள் ஆங்கில பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாமா? அல்லது இதே நூலை ஆங்கிலத்திலும் வெளியிடும் திட்டம் இருக்கிறதா? - பொறி. முத்து பிச்சை, ஆவடி
கைக்குள்ளே கட்டுமானத் தொழில் என்ற என்னுடைய நூல் பயனாக உள்ளது என்று பாராட்டுரை வழங்கியமைக்கு நன்றி.
இந்த நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் வெளியிடும் திட்டம் ஏதுமில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழும் உங்களின் உங்கள் மகனும் இந்த நூலைப் படித்து புரிந்து கொள்ளலாம்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|