பார்ப்பதற்கு ராட்டினம் போல காட்சி அளிக்கும் இந்த அமைப்பு ஒரு விதத்தில் நீர் இறைக்கும் ராட்டினம் தான். பிரேசிலில் உள் “அராகுவியா’ என்னும் நதியின் கரையோரத்தில் இந்த தானியங்கி அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது.
எதற்காக இந்த அமைப்பு?
ஆற்றின் இரு கரைகளிலும் நெடிய மரங்களை வளர்க்கும் திட்டத்திற்கு இந்த ஆற்றோர ராட்டினம் உதவி செய்கிறது. அதாவது, இதில் உள்ள 8 துடுப்புப் பலகைகள், ஒரு நீளமான இரும்புக் குழாயில் பொருத்தப்பட்டு, ‘பேரிங்” உதவியுடன் எளிதாக சுழலும்படி உள்ளது. ஆற்றின் நீரோட்டம் தொடர்ச்சியாக துடுப்புப் பலகைகளை தொடர்ந்து சுழலவிட்டுக் கொண்டே இருக்கிறது. நீரை முகர்ந்து மேல் எழும்போது துடுப்புப் பலகைகளிடமிருந்து சிறிதளவு நீர் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் குழாயில் சென்று பிறகு, கரையிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் நீளமான குழாய்க்குச் செல்கிறது. பிறகு அந்த நீர் வெட்டப்பட்ட கால்வாய் மூலமாக அருகாமையில் நடப்பட்டுள்ள மரக் கன்றுகளுக்கு சென்றுவிடுகிறது.
பைசா செலவில்லாமல், மரக்கன்றுகளுக்கு ஆற்றில் இருந்து நீர் பாய்ச்ச இப்படி ஒரு ஐடியா. பலே!
From : Builders line Monthly
www.buildersline.in
For Subscribe pl call : 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140899
|