சிமென்ட் விலை மீண்டும் உயர்வு கட்டுமான துறை கடும் அதிருப்தி
04 மார்ச் 2021   11:08 AM



சென்னை:உற்பத்தியாளர்களின் கூட்டு முடிவால், சிமென்ட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளதற்கு, கட்டுமானத் துறையினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில தலைவர்ஆர்.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டு சதி செய்து, சிமென்ட் விலையை உயர்த்தி வருகின்றனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம். கடந்த சில நாட்களாக, செயற்கையாக சிமென்ட் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், ஒரு மூட்டைக்கு, 50 ரூபாய் வரை உயர்த்தும் நடவடிக்கையில், உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சிமென்ட் உற்பத்தியாளர்களின் இந்த போக்கை கடுமையாக கண்டிக்கிறோம். அரசு தலையிட்டு, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1966534