கட்டடத்தின் வலிமை பாதிக்காத ஒயரிங்..
03 டிசம்பர் 2020   01:04 PM



கட்டடத்தின் வலிமை பாதிக்காத ஒயரிங்..
சுவர்களைக் கட்டி முடித்த பின்தான், இடித்து ஒயரிங் குழாய்களை பதிக்க வேண்டும். இதற்காக சுவர்களை உடைக்கும் பணியாளர்கள் அவற்றைச் சரிவர மூட வேண்டும். இதில் ஏற்படும் குறைபாடுகளும் கட்டடத்தைப் பாதிக்கும்.
ஒரு சுவரைக் கட்டி முடித்த பின், அதில் ஏற்படும் உடைப்புகள் சரிவர அடைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதன் வாயிலாக ஏற்படும் கசிவு படிப்படியாக முன்னேறி ஒட்டுமொத்த கட்டடத்தையும் பாதித்துவிடும்.
பெரும்பாலும் சுவர்களில் உடைக்கப்படும் பகுதிகள் கான்கிரீட் கலவை கொண்டு அப்படியே மூடப் படுகின்றன. இந்த மேலோட்டமான பூச்சு தான். பல சமயங்களில் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
சுவர்களில் மின்சார ஒயர் குழாய்களை அமைப்பதற்காக, உடைக்கப்படும் பகுதிகளை மூடும் போது, அதில், சிறு ஜல்லிகளுடன் கான்கிரீட் கலவையைச் சேர்த்து அடைக்க வேண்டும். இதன் மேல், மெல்லிய கம்பி வலையை சிறு துண்டுகளாக்கி வத்து, பூச்சு வேலையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வறு செய்தால், உள்ளுக்குள் அமைக்கப்பட்ட குழாயால் சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் ஜல்லி, கம்பி வலையை சிறு துண்டுகளாக்கி வைத்து, பூச்சு வேலையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால், உள்ளுக்குள் அமைக்கப்பட்ட குழாயால் சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 
மேலும் ஜல்லி, கம்பி வலைப் பயன்படுத்துவதால், அந்த இடம் சுவரின் மற்ற இடங்களை காட்டிலும் வலுவாக இருக்கும்.
அறைச் சுவரில் ஒற்றை ஒயரிங் குழாய் அமைக்கும் இடத்தை விட, பிரதான இணைப்பு பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய குழாய்களை பதிக்கும் இடத்தில் தான், சுவர் பெரிய அளவில் உடைக்கப்படுகிறது. இந்த இடங்களை முறையாக கவனித்து ஜல்லி, கம்பி வலை கொண்டு பூச்சு வேலை செய்ய வேண்டும். இல்லா
விட்டால் இப்பகுதிகளில் இருந்து தான் விரிசல்கள் துவங்கும். அது கட்டடத்தையே பாதித்து விடும்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1970286