பாதுகாப்பாய் பாலம் கட்ட ஆலோசனை சொல்லுங்க!
03 டிசம்பர் 2020   12:03 PM



நான் பொத்தேரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறு கால்வாய் பாலம் கட்டும் புராஜெக்டில் பணிபுரிய உள்ளேன்.  இது எனது முதல் புராஜெக்டாகும்.  ஒரு பொதுப்பணி புராஜெக்டை மேற்கொள்ளும் போது சைட் பொறியாளர் நான் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்ன என்பதை கூற முடியுமா?

பாலம் கட்டும்போது களப் பொறியாளர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் கீழே
1. பாலத்தின் இருபக்கங்களில் 10 அடிக்கு முன்பே சாலையை அடைத்துவிட வேண்டும்.   இரவு நேரங்களில் Retro Reflective signals கண்டிப்பாக வைத்திட வேண்டும்.
2. 50 அடிக்கு முன்பாகவே மாற்று வழி சரியாகப் போடப்பட்டு ஊர்திகள் திருப்பிவிடப்பட வேண்டும்.  இது ஒப்பந்த வேலையின் முக்கியமான ஒரு பகுதியாகும்.  மாற்றுப் பாதையை ஏனோ தானோ என்று போட அனுமதிக்கக் கூடாது.
3. பாலம் கட்டும் போது கால்வாயில் தண்ணீர் இருந்தால் இறைத்திட தனி பம்பு மோட்டார் வசதி - மிகக் குறைந்தது டீசல் இஞ்சின் கொண்டாவது தண்ணீர் இறைக்கப்பட வேண்டும்.
4. பாலத்தின் மீது காங்கிரீட் போட வலிமையான உறுதியான தாங்கமைப்புகள் (Centering & Shuttering) அமைக்கப்பட வேண்டும்.
5. இவற்றுடன் பாலத்தின் இரு பக்கங்களிலும் - ஒரு பணியாளர் சிவப்புக் கொடியுடன் - போக்குவரத்தைச் சீர் செய்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1970262